ஓர் ஆழமான பள்ளத்தாக்குக்குள்
எந்தன் நிமிடங்கள் விழுந்துகொண்டிருக்க
கொட்டிக்கிடக்குது பணிகள் ஆயிரம்
தட்டிக்கழிக்கிறது சோம்பல் பேய்
தெரியப்படுத்தாத விதி
தினந்தோரும் என்னைக்
காயப்படுத்துது அதையும் மீறி
ஏதோ ஒரு ஞானம் சேர்ந்துகொள்ளுது
சோம்பல் முறித்தப்பிறகாவது இல்லை
நீண்டன் நெடிய
உறக்கம் முடிந்தபிறகாவது
விடியல் வந்தபாடில்லை…
அடுத்த உறக்கத்திற்கு
அடிபோடுது மனம்
மறுபடியும் விழுங்கப்பாத்தது
புது புது கனவுகளுக்குள்
பிண்ணிகொள்ளுது கண்விழி
சூரியன் தலைமேல்
விழுந்தாலும் எள்ளளவும்
மனம் மாறவில்லை
கையில் கிடைக்கும்
கோப்பை தேநீரை
உதறி வெறுக்குது
இதோ எனது
தலையணை சிரிக்குது
என்னைப் பார்த்து
நான் தூக்கத்திற்கு
அடிமையாம்!!