அப்பா... அப்பா.... அப்பா.....
தும்மலிலும் நன்றி சொல்வேன்
தாயுமாகிய என் அப்பா!

நான் எட்டி உதைக்க
அம்மாவின் பிரசவகால வேதனையில்
என்னுடன் அம்மாவையும் அணைப்பாயாம்
நன்றி சொல்கிறேன் அப்பா!

ஊர் உலகம் சொல்லுமாம்
பொட்ட பிள்ளையா..... பாவம்
நீ சொல்வாயாம் என்
மகளல்ல என் தாயென்று
நன்றி சொல்கிறேன் அப்பா!

தவழ பழகின வேளையிலும்
என் கால்கள் வேதனை
படுமென பூக்கள் நிறைக்க
எண்ணம் கொண்டாயாம் ..சின்னமகள்
நன்றி சொல்கிறேன் அப்பா!

என் முதல் மழலைமொழி
அத்த...தை என நான்கூற
வாடிப்போனதாம் உன் மனசு
மறுகணமே உன்கன்னம் தடவி
அப்பா என்றுநான் அழைக்க
ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு
யானை சவாரியாம் உன்மேல்
நன்றி சொல்கிறேன் அப்பா!

நான் அழும்பொழுது கடிந்து
கொள்ளும் அம்மாவை கடிந்து
இரவு முழுவதும் தூங்காமல்
தொள் மீது நான்சாய
கனவுகள் பல காண்பாய்
நன்றி சொல்கிறேன் அப்பா!

தினமும் வேலை செல்லும்
முன்பு தொட்டிலை விழக்கி
என் சிரிப்பு பார்த்துவிட்டு
செல்வாயாம் இன்றுவரை அப்படித்தான்
நன்றி சொல்கிறேன் அப்பா!

பள்ளி செல்ல அடம்பிடிக்க
மகள் சீமை செல்வதுபோல்
பெருமிதம் கொண்டு அன்றுமுதல்
என் கைப்பிடித்து கூட்டிசெல்வாய்
நன்றி சொல்கிறேன் அப்பா!


நண்பர்கள் பல கிடைக்க
எனதப்பா யார்னு தெரியுமா?
உனது பெருமை மட்டுமே
அவர்களிடம் நான் பேச
எனக்கு நெற்றியில் முத்தம்தருவாய்
நன்றி சொல்கிறேன் அப்பா!

தூக்கம் வர கதைகேட்பேன்
உன்மேல் ஒய்யாரமாய் கால்போட்டு
நீ சொன்ன விலங்குகதைகள்
மனிதர்கள் உணரவைத்தது அப்பா!
நன்றி சொல்கிறேன் அப்பா!

நான் பூப்படைந்த பொழுதும்
ஒரு மூலையில் அம்மா
அழுது கொண்டு இருக்க
நீதானே வந்து எனக்கு
தைரியம் ஊட்டினாய் சிரித்துக்கொண்டே
நன்றி சொல்கிறேன் அப்பா!


வெளியில் சென்றால் எப்பொழுதும்
தலை குனிந்து செல்
என ஊரார் குட்ட
நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட
பார்வையும் என்று வீரம்
ஊட்டினாய் பண்பை ஏற்றினாய்
நன்றி சொல்கிறேன் அப்பா!

விளையாட்டாய் அம்மா சமைத்த
உணவை நான் செய்ததெனகூற
வாழ்வில் இப்படி ஒரு
சமையல் கண்டதில்லை எனமகிழ்ந்தாய்
நன்றி சொல்கிறேன் அப்பா! Razz

பட்டங்கள் நான் படிக்க
உன் முன்மாதிரி யாரென
கேட்க உன்பெயர் சொல்வேன்
அரங்கத்தில் தலை நிமிர
நன்றி சொல்கிறேன் அப்பா!

உற்ற தோழன் நீயிருக்க
கவலை என்ன எப்பொழுதும்?
எனக்கு கணவன் எப்படி
வேணுமென நீ கேட்பாய்
நான் சிரித்துகொண்டே உங்கள்
விருப்பம் என்று உரைப்பேன்!

உண்மையில் அப்பா எனக்கு
உன்னை மாதிரி கணவன்
வேண்டுவேன் கடவுளிடம் நித்தம்!
ராஜகுமாரனை கைப்பிடித்து கொடுக்க
அப்பா நீ இருக்க
கவலை எனக்கில்லை அப்பா!
நன்றி சொல்கிறேன் அப்பா!

நன்றி சொல்கிறேன் அப்பா!
இன்றும் நினைத்து கொள்கிறேன்
இன்னொரு ஜென்மும் நான்
உனக்கு அம்மாவாக வேண்டுமென்று!