மார்பில் உறங்கும் எனது பத்து மாத மனதே 
எனது கனவுகளில் முளைத்த முத்தே
எனது கண்ணீர் துடைத்த கண்ணே
மூதுரையை மழலையில் இழைத்த பெண்ணே
எனது செல்லம் நீயல்லவோ  
எனது சிட்டு நீயல்லவோ
துயரமெல்லாம் ஏணியாக்கி உனதுடன் உயரம் போகும்
எனது பயணம்  ஆரம்பமாகி சில மணி நேரம் கூட ஆகல
எதிர்பார்த்த அன்பெல்லாம்
கானல் நீராகி போன போதும்
கடல்களாய் இதோ என் அன்பு
என் குட்டி மீனு நீ
சிரிது காலம் மீன் தொட்டிக்குள் 
நீ நீந்திரிவ எனக்குத் தெரியும்


மீனுக்கு சிறகு முளைச்சு
நீயா வருவியானு
கண்ணீரெல்லாம் வற்றி போய் என் முத்த வானம்
காத்திகிட்டிருக்கு  
அம்மா என்ற குரல் கேட்க என் பித்து மனம்
காத்திருக்கு

அம்மா இல்லா அனாதை சொல்ல கேட்டிருப்ப
அம்மாவ அனாதையாக் கும் சொல்ல கேட்காத

என் அம்மா என் அம்மானு உன் கண்களில் கோடி நட்சத்திர்த்தப் பார்க்க இந்த இருண்ட அம்மா காத்திருக்கேன்