மெல்லிய சாரலை மழையாகச் சொல்லி
கட்டளையிட்டது மண்வாசம்.............
இருள்நிலவை வல்லிய சூரியனாக்கசொல்லி
கட்டளையிட்டது பனித்துளி..............
மண்ணில் சேர்ந்ததையெல்லாம் வளமாக்கசொல்லி
கட்டளையிட்டது உயிர்க்குலம்.........
தலைவன் கட்டளைக்கு வழிநடப்பைவகளோ?
மழைநீர் பூமியை நனைத்துவிட்டது
சூரியஒளி வானை நிறைத்துவிட்டது
உயிர்க்குலம் செழிப்பை விதைத்துவிட்டது !
தலைவன் முதற்றே உலகு!