மெல்லிய சாரலை மழையாகச் சொல்லி
கட்டளையிட்டது மண்வாசம்.............

இருள்நிலவை வல்லிய சூரியனாக்கசொல்லி
கட்டளையிட்டது  பனித்துளி..............

மண்ணில் சேர்ந்ததையெல்லாம் வளமாக்கசொல்லி
கட்டளையிட்டது உயிர்க்குலம்.........

தலைவன் கட்டளைக்கு வழிநடப்பைவகளோ?

மழைநீர்  பூமியை நனைத்துவிட்டது
சூரியஒளி  வானை  நிறைத்துவிட்டது
உயிர்க்குலம் செழிப்பை விதைத்துவிட்டது !


தலைவன் முதற்றே உலகு!