சட்டம் போடுங்கள்
திட்டம் தீட்டுங்கள்
இரவு தெருவிளக்குகள்
வேண்டவே வேண்டாம்
கட்டிடம் உள்ளே
மின்சார வெளிச்சம்
கூடவே கூடாது.....

வீட்டுப் பாடங்களுக்கு
போடுங்கள் தடா
மக்கள் அனைவரும்
கட்டிடங்கள் வெளிவந்து
இரவுலகை பாருங்கள்!


ஒளிகைநீட்டி நம்மை
அழைக்குது நிலவு
சிங்காரம் செய்துகொண்டு
ஓய்யாரநடை நடக்குது
முப்பத்துமுக்கோடி கவிகள்
உதடுகள் பாடசொல்லுது
இரவு உறக்கம்சொல்லிதந்த
முன்னோர்களை நிந்தனைசெய்யுது!

ஓடிவந்து தன்னுடன்
கண்ணாமூச்சி ஆடச்சொல்லுது
துயில்கொள்ள தோன்றினால்
தாலாட்டும் இசைக்கிறது
தாய்மையுணர்வு பெருக
பாலூட்ட நினைக்கிறது
பாட்டி கதைகள்
பலசொல்லி மகிழ்கிறது!


தன்னை ரசிப்போர்
யாவரும் தனக்கு
ரத்த பந்தம்
என்று கூறி
உலகம் சுற்றி
திரிகிறது தங்கைநிலா
வானத்தின் நங்கைநிலா