நிலவே! நிலவே !
உன்னை பார்த்து ரசிக்க
புத்திக்குள் பந்தி நடக்கிறது
விதவிதமாய் சிந்தைகள்
எட்டிப்பார்த்து செல்கிறது
இரவில்
கருவிழி நிலவு போதாதென்று
கண்ணிமை மூடமருக்கிறது
வெள்ளியை கண்டுகழிக்கிறது
ஓய்வெடுக்கும் என் கரங்கள்
விரல்களை ஏவிவிட்டு
உனைப் புரட்டிப்பார்த்து
மறுபக்கம் எட்டப்பார்க்கிறது
மணலில் நடக்கும் கால்களோ
காற்றிலேறி உந்தவழும்
கால்களை நோக்கி
ஒய்யாரமாய் நடக்கப்பார்க்கிறது
மனித உள்ளமோ ஆசைகொண்டு
உன்னில் குடியேற
குடிலைத் தேட
பயணம் கொள்ளப்பார்க்கிறது
என் தாய் விஞ்ஞானமோ
உன்னில் பிராணவாயு
நிரம்ப நிரப்பி
யுகங்கள் வாழப்பார்க்கிறது
என் தேசப்பற்றோ எந்தன்
மூவர்ணக் கோடியை
உந்தரையில் நட்டு
கைகூப்பி வணங்கப்பார்க்கிறது
என் சத்திய ஆன்மிகமோ
அன்பே நிலவென்று
நிலவே சிவமென்று
வேள்விகள் நடத்தப்பார்க்கிறது